அழகு (விகடன்)

அழகு (விகடன்)
.வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான்.
பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம்.
அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படுத்தும் பாகங்களையும் ஏழாக வகைப்படுத்தலாம். கூந்தல், கண்கள், இதழ்கள், கன்னம், கழுத்து, இடை மற்றும் விரல்கள் ஆகிய ஏழு வகை பாகங்களும் அழகு பொருந்தி இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் நினைப்பார்கள்; அது இயற்கையே. ஆனாலும், தொடர்ந்து அழகைப் பேணிப் பாதுகாக்கும் பெண்களுக்கே இந்த ஏழு வகை அம்சங்களும் பொருந்தியிருக்கும்.
சிலருக்கு அழகைப் பேணுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. தெரிந்தாலும் அரைகுறையாகவே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்காகவே 'அவள் விகடன்' இதழில் 'அழகு' தொடராக வெளிவந்தது. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா எழுதிவந்த இந்தத் தொடர் வாசகியர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.