வேங்கை வனம் (தமிழினி)

Price:
590.00
To order this product by phone : 73 73 73 77 42
வேங்கை வனம் (தமிழினி)
மனிதன் அறிவுற்றதால் பெற்ற பலன் நாகரீகங்களை உருவாக்கி வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதுதான். வெறுப்பும் போர்களும் பேரழிவுகளும் அவனால் விளைந்தவைதான். எனில், உணர்வுகளில் அதன் உச்சமான காமத்தில் மனிதன் விலங்கின் இயல்புகளில் இருந்து எவ்வகையில் வேறுபட்டவன்? இதற்கான விடை தேடித்தான் இந்நாவல் விரிகிறது. ரந்தம்பூர் காட்டைக் களமாகக் கொண்டு ஒவ்வொரு வரியையும் துல்லியமான காட்சிச் சித்திரமாக்குகிறது. மன்னராட்சிக் காலத்தில் வேட்டைக் காடாகவும் மக்களாட்சிக் காலத்தில் அணிநிழற் காடாகவும் திகழும் கானகத்தில் நூற்றாண்டுகளாக நீளும் புலிகள் வமிசத்தின் கதையைச் சொல்கிறது. வேங்கை வனம் மனிதனின் அகத்தை அகழ்ந்து ஆய்ந்து அவனது தன்னியல்பான குணங்களைக் கண்டு சொன்னதில், தமிழ்ப் புனைவிலக்கிய வரலாற்றில். இந்நாவல் மற்றுமொரு சாதனை