திருமந்திரம்

திருமந்திரம்
மூடியிருக்கும் கை, வெறும் கை - இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மந்திரம் என்பது மூடியிருக்கும் கை,உள்ளே மறைந்து கிடப்பதைக் கண்டறியும்முயற்சி நமக்கு இருக்க வேண்டும்.
திருமந்திரம் கல்லாதவர்களுக்கு அறிவையும், கற்றவர்களுக்கு தெளிவையும் வழங்கக்கூடியது. இது, சம்சார சாகரத்தின் ஆழத்தையும், யோக நெறியின் அகலத்தையும் கண்டது. வேதங்களும், ஆகமங்களும் எடுத்துறைத்த விஷயங்களையெல்லாம் 'மந்திரங்களா'க்கித் தந்துள்ளார் திருமூலர். திருமந்திரம் ஒரு கருத்துக் கருவூலம். திருமந்திரத்துக்கு எத்தனையோ பேர் உரைகளும், விளக்கங்களும் எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தில் சராசரி மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குத் தேவைப்படும் விஷயங்களை முடிந்த அளவில் தேர்ந்தெடுத்து, தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். வாழ்க்கை சிறக்கவும் மேம்படவும் நீங்கள் மேற்கொள்ளும் உங்களுடைய தேடலில் இந்தப் புத்தகம் சிறந்த வழித்துணையாக இருக்கும்.