பறவை தினங்களை பரிசளிப்பவள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
பறவை தினங்களை பரிசளிப்பவள்
சக்தி ஜோதியின் கவிதைகள் உயிரொலியின் மிகச்சிறிய மீட்டல். அதன் தாழ்சுருதியின் கணத்தில் கனவுகளினால் ஆன்மாவைத் திறந்துவிடுகிறது. சுவாசக்காற்றினூடே அன்பின் ரகசிய ஒலிக்குறிப்பினை உடல்மேல் படர்த்தியபடியிருக்கிறது.
சக்தி ஜோதியின் கவிதைகள் மனதின் சுனைநீரைப் பெருக்கெடுக்கச்செய்கிற ஒற்றைச்சொல்லை மந்திரக்கோலாக வைத்திருத்திருக்கிறது. காற்றின் சுழற்சியில் தன்னை ஒப்புகொடுக்கும் பாதையை நிலத்திலிருந்து ஆகாயத்திற்கு நீட்டுகிற மிகச்சிறிய விருப்பமாகத் தொடர்ந்தியங்குகிறது.