ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்

ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்
* பக்கத்து வீட்டு பையனுடன் சின்ன வயசில் போட்ட சண்டை ஞாபகம் இருக்கிறது; முதலாம் பானிப்பட் போர் நடந்த ஆண்டு ஏன் தேர்வு நேரத்தில் ஞாபகம் வர மறுக்கிறது?
* ரஜினி படத்தில் வரும் பாடலை வரிசை மாறாமல் பாட முடிகிறது; மனப்பாடப்
பகுதியில் வரும் திருக்குறளின் இரண்டு வரி எத்தனை முறை படித்தாலும் நினைவில் பதிய ஏன் மறுக்கிறது?
* நெருங்கிய நண்பர்களின் செல்போன் எண்கள் எல்லாம் தெளிவாக நினைவில் இருக்கிறது. தனிம வரிசை அட்டவணையில் தங்கம் எந்த வரிசையில் இருக்கிறது என்பது மறந்து போகிறது.
* நண்பர்களோடு சுற்றுலா சென்ற தொலைதூர ஊரில் பார்த்த இடங்களின் பெயர்கள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது; திருமண மண்டபத்தில் திடீரென பார்க்கும் தூரத்து உறவினரின் பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது.
நம்ம ஊர் தேர்வு முறைகள் பலவும் நமது அறிவைவிட ஞாபக சக்தியை சோதிப்பதாகவே அமைந்துள்ளன. எனவே ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்பவர்களுக்கே வளமான எதிர்காலம் சாத்தியம். ஞாபக மறதியை எப்படி விரட்டுவது? பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள எளிமையான வழி எது? நினைவாற்றலை வளர்க்கும் ரகசியம் எது?
எல்லாம் சொல்லும் இனிய நூல் இது!