எதிர்ப்பிலேயே வாழுங்கள்
ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான். இதைக் கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார்: "எப்பொழுதும் வாழ்வது போல - கணத்துக்கு கணம்! என்னைப் பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது. ஆகவே. எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன? 24 வருடம இருந்தால் என்ன? இதில் எந்த வித்தியாசமும் எனக்கு இல்லை. நான் எப்போதுமே கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால். இந்தக் கணமே எனக்கு அதிகம்தான். 24 மணிநேரம் என்பது மிக அதிகம்: இந்த ஒரு கணமே போதும்!".