வேங்கடம் முதல் குமரி வரை (சந்தியா)

Price:
800.00
To order this product by phone : 73 73 73 77 42
வேங்கடம் முதல் குமரி வரை (சந்தியா)
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது.
இந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும். போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் இன்னும் பல மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும். புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும். சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம். பாடல்களானால் அமைதியாகருந்து பார்த்தால்தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும்.இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடீத்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது.