சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும்

Author: சி.எஸ். சுப்பிரமணியம், கே.முருகேசன்
Category: வாழ்க்கை வரலாறு
Available - Shipped in 5-6 business days
சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும்
இந்திய அரசியல் களம்,பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி,மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது.விடுதலைப்போர் அரிய பல சிந்தனையாளர்களை,செயல் வீரர்களை,தலைவர்களை,தியாகிளை உருவாக்கியது.அன்றைய ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியும் தொடர்ந்த லெனின் தலைமையும் புதியதோர் உலகு செய்யப் புறப்பட்ட போராளிகளுக்கு ஆதர்சமாயிற்று.இந்தச்சூழலில் வெளிப்போந்தவர் தோழர் சிங்காரவேலர்.தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் போற்றப்படும் இவர்,தன் ஆழ்ந்த புலமை தேடிப் பெற்ற மார்க்சியப் பேரறிவு,விரிந்த ஆய்வுத்திறன்,ஏற்றுக்கொண்ட உயர் நோக்கங்களில் உறுதி ஆகியவற்றின் துணை கொண்டு ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.