புயலிலே ஒரு தோனி (காலச்சுவடு)

புயலிலே ஒரு தோனி (காலச்சுவடு)
சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது.
புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு புயலிலே ஒரு தோணி
வரலாற்று அடிப்படையிலும் 'புயலிலே ஒரு தோணி தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.
ஓர் இலக்கிய ஆளுாமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல் வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே நன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம்,