நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது.
எப்படி? உங்களுக்குத் தமிழ் மொழியில் தேர்ச்சி இருந்தால், இந்நூலைக் கொண்டு ஆங்கிலம் கற்பது எளிது. இலக்கணம் என்னும் பெயரில் பல கடும் விதிகளைச் சொல்லி அச்சுறுத்தாமல், இயல்பான முறையில் எளிதாக இலக்கணம் கற்றுக்கொடுக்கிறது. அடிப்படை ஆங்கிலம் தொடங்கி படிப்படியாக உயர்நிலை ஆங்கிலம் வரை எழுதவும் பேசவும் கற்றுத் தருகிறது.எளிய தமிழில் நல்ல ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உதவுகிறது. இந்நூலின் விரிவான பயிற்சிகளைப் பயன்படுத்தி உங்கள் ஆங்கிலத் திறனைச் தித்துக்கொள்ளலாம். தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம்,அச்சமின்றி, தயக்கமின்றி சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும், எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளலாம்.
நூலாசிரியர் நலங்கிள்ளி 15 ஆண்டுகளாகப் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வருகிறார். தன்னுடைய விரிவான அனுபவங்களின் அடிப்படையில், நவீனப் பயிற்சி முறைகளைப் பயன்படுத்தி இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.உங்களுக்கும் ஆங்கிலத்துக்குமான இடைவெளியைக் குறைக்க இந்த ஒரு புத்தகம் போதும். தமிழன்னை கைப்பிடித்து படிகள் பல ஏறி, ஆங்கிலச் சிகரம் தொடலாம்.