மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்

0 reviews  

Author: ஜெ.ராஜ்குமார்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்

நீ நினைப்பது நடக்கவில்லையெனில்

தெய்வம்

நினைப்பது நடக்கிறதென்று அர்த்தம்!

நீ நினைக்கும் அனைத்தும்

நடக்கிறதென்றால்

தெய்வம்

உன் பக்கம் என்று அர்த்தம்!

நீ நினைக்காத போது

நீ நினைத்த காரியம்

நிறைவேறும் தருணம்தான்

'திருப்புமுனை.............!'

     இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு திருப்புமுனைக் காத்துகிடக்கிறது. இதற்காகத்தானே முட்டி மோதிப் போராடுகிறோம். வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம், மனப்போராட்டம் இருக்கக்கூடாது....!

     மனத்தின் இறுக்கங்களைக் களைய, வாழ்வின் வழிமுறைகளைக் கண்டறிய, செல்வங்கள் எதுவெனப் புரிய, மூட நம்பிக்கைகளைக் களைய, முடிந்த வரையில் முழு மனிதனாய் மாறிட... முதலிலும், முடிவிலும் உங்கள் மனத்திலும் இடம்பெறப் படைக்கப்பட்ட இரண்டாம் முயற்சி இது...!

     இல்லந்தோறும் உங்கள் உள்ளந்தோறும் உலா வர, கவிதை நடை பயின்று உங்கள் வாழ்க்கை நடை மாற்ற வந்துள்ளேன்...!

பயிலுங்கள் ... பள்ளிப் பருவத்தில் பாடம் பயில்வது போல் ... இது வாழ்க்கைப் பாடம், கொஞ்சம் யோசித்து யாசித்துப் பயிலுங்கள் ...!

நன்றி வணக்கம்!