கேலிச்சித்திர வரலாறு

Price:
299.00
To order this product by phone : 73 73 73 77 42
கேலிச்சித்திர வரலாறு
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளமைப்பின் ஓவியங்களுக்கும் மியூரல்களுக்கும் ஓவியர்களிடமிருந்து மாதிரி சித்திரங்களுக்கும் அல்லது கார்ட்டூன்களுக்கும் அழைப்புவிடுத்தது. மக்கள் ஏழ்மையில் பசியுடன் இருக்கையில் அரசாங்கம் இதுபோன்ற ஆடம்பர வேலைகளுக்கு பணத்தை செலவு செய்வதை கேலி செய்து பல கலைஞர்கள் ஓவியத்தை இயற்றினார்கள். அவற்றை ‘கார்ட்டூன்’ தலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டது.