இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

Price:
185.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்புகள் செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டு கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இரவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் வெகுவாக ரசிக்கப்படுவதற்கு இணையாகவே எழுத்தாளாகளாலும் தீவிரமாகப் பின்பற்றப் பட்டவை. சுவாரசியமான எழுத்தாகவும் அசலான முன் உதாரணங்களாகவும் கருத்த தகுந்த நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்த நூல். வாசிக்க விரியும் நுட்பத்தாலும் மானுடச் சிக்கலின் பின்னலாலும் முக்கியத்துவம் பெறுகின்றன இந்த நான்கு படைப்புகளும்.