அவரும் நானும்

அவரும் நானும்
தளபதி அவர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழமாகச் சித்தரிக்கும் நூல் இது. திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் தளபதியோடு இணைந்து நடந்த பயணத்தின் நினைவுகளை,மறக்க முடியாத மனப்பதிவுகளாக இந்த நூலில் சித்தரிக்கிறார்.ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளை, சவால்களை, கடினமான காலக்கட்டங்களையும் நெகிழ்ச்சியான இனிய நினைவுகள் பலவற்றையும் விவரிக்கறார். பொது வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தளபதியின் பன்முகத் தன்மை கொண்ட பரிமாணங்களை,செயல் திறமையை, அனைவரையும் அரவணைக்கும் பண்பை வெகு நேர்த்தியாக இந்ந நூல் சித்தரிக்கிறது. திருமதி. துர்கா ஸ்டாலின் மிக இயல்பான மொழியில் எண்ணற்ற நினைவுகளை யாரும் அறிந்திராத புதிய செய்திகளை இந்த நூலில் பதிவு செய்கிறார். தளபதி அவர்களுடைய தனிப்பெரும் மகத்தான ஆளுமையை வெளிப்படுத்தும் மாபெரும் வரலாற்று ஆவணம் இந்த நூல்.