கம்பஇராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு நட்பு பாசம் சத்தியம் தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லி தரும் உன்னத காவியம். இன்றைய தலை முறைக்கும் இராமாயணம் தெரிய வேண்டும் என்பதற்காக சுமார் 100 பாடல்கள் வழி எளிய தமிழ் நடையில் இராமாயணக் கதையை தேவி வார இதழில் எழுதினேன். அதன் நூல் வடிவமே இது. |