மழைத் துளியைப் போல எப்போதுமே புதிதாகயிருக்கிறது ஆலஸின் அற்புத உலகம். இது வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக் கனவு. உலகின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இந் நூல். சிரித்த படியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும் செஷாயர் பூனையைப் போல வாக்கியங்களின் ஊடாக புன்னகையைத் தோன்றி மறையச் செய்வதுதான் இதன் சாதனை.