வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது.
சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் இராஜராஐ விஜயம் நாடகம் திட்டமிடப்பட்டபடி நிறைவேறுமா? கல்வெட்டுகள் மற்றும் திருக்கோயில்கள் காட்டும் வலுவான வரலாற்று ஆதாரங்களின் பின்னணில் கண்முன் விரியும் சோழர் காலத் தஞ்சாவூரில் விறுவிறுப்புக் குறையாமல் இறுதிவரை செல்லும் இந்த நாவல் வரலாறு டாட் காமில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்ற புதிய சரித்திரப் புதினம்.