கோகுல் சேஸாத்ரி அவர்கள் எழுதியது.
இது ஒரு வரலாற்றுப் புதினமாகும்.
சரித்திரக் கதை என்றாலே பக்கம் பக்கமாக விரியும் வர்ணனைகள் பயமுறுத்தும். மன்னர்களையும் அவர்தம் பிரதாபங்களையும் பெரும் அலுப்போடு ஏற்று வாசித்த அனுபவம்தான் முதலில் நினைவுக்கு வரும். இதற்கு நேர் மாறாக சாதாரணக் குடிகளின் வாழ்க்கையை இவ்வளவு எளிமையாக - அவர்கள் மண்ணின் உயிர்ப்போடு எங்கள் முன்னர் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.